வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

Update: 2023-06-25 12:32 GMT

புதுக்கோட்டை விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காலாடிபட்டி சத்திரம் என்ற ஊர் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பலஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. அதுமட்டுமின்றி எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்ற வண்ணம் உள்ளது. இதனால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்