பஸ்களை சரியான நேரத்தில் இயக்க கோரிக்கை

Update: 2023-06-25 12:19 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விஸ்வக்குடி, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமங்களுக்குள் தினமும் 5 முறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மதியம் நேரத்தில் ஊருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வெளியூர்களுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்