ரவுண்டானா கட்ட வலியுறுத்தல்

Update: 2023-06-21 13:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால்ரோடு கிராமம் திருச்சி - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. கறம்பக்குடி - தஞ்சாவூர் சாலை இணைப்பாகவும் இப்பகுதி உள்ளது. இதனால் இந்த நால்ரோடு பகுதியில் கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கிராமங்கள் சூழ்ந்த பகுதி. இங்கு அரசு கலை அறிவியல் கல்லூரியும் உள்ளது. ஆனால் இந்த நால்ரோடு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நால்ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்