பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-06-21 11:34 GMT

தூத்துக்குடி மாநகருக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அல்லிக்குளம், புதுக்கோட்டை, மறவன்மடம், அந்தோணியார்புரம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் அங்கு பொதுமக்கள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடந்து அவதிப்படுகின்றனர். எனவே அங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி