விருதுநகர் மெயின்பஜார் ரோடு பகுதியில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இப்பகுதியில் சிலர் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.