பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-06-11 14:32 GMT

ஈரோட்டில் இருந்து பெருந்துறை சிப்காட்டுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்கிறார்கள். இதற்காக ஈரோட்டில் இருந்து காலை நேரத்தில் திருப்பூர், கோவை செல்லும் பஸ்களில் ஏறுகிறார்கள். ஆனால் அந்த பஸ்கள் பெருந்துறை சிப்காட்டில் நிற்பது இல்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சிப்காட் பகுதியில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் அங்கு பஸ் நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்