பஸ்கள் செல்லாத மேம்பாலம்

Update: 2023-06-07 17:00 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேம்பாலம் தொடங்கி குரங்கு சாவடியில் முடிகிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் இது. புதிய பஸ் நிலையத்தில் ஒரு மிகப்பெரிய வழிகாட்டி பலகையில் தர்மபுரி, மேட்டூர், பெங்களூரு செல்ல அம்புக்குறி போடப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மற்றும் அரசு எந்த பஸ்களும் மேம்பாலத்தில் செல்வதில்லை. இந்த பஸ்கள் மேம்பாலத்தை பயன்படுத்தினால் 5 ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே இந்த மேம்பாலம் வழியாக பஸ்கள் செல்ல போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜான், குப்தா நகர், சேலம்.

மேலும் செய்திகள்