வாகன ஓட்டிகள் கடும் அவதி

Update: 2023-06-04 12:03 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்திலிருந்து-பெரம்பலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் ஒரே நேரத்தில் கடந்து செல்லும்போது, சாலை ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழிவிட்டு சாலை ஓரம் ஒதுங்கும்போது, கருவேல முள்கள் அவர்கள் மீது உரசுவதினால் அவர்கள் காயமடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்