இரும்பு தடுப்புகளால் ஏற்படும் விபத்துகள்

Update: 2023-06-04 11:42 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் பகுதியில் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் சரிவர ஓட்டப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஓட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்