பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-05-31 14:41 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வேலைக்காக கரூர் அருகில் உள்ள ஜவுளி பூங்காவிற்கும், கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். பாரதி நகரில் இதுவரை பஸ் நிறுத்தம் கிடையாது. மாலை வேலை முடிந்து செல்பவர்கள் மலைக்கோவிலூரில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாரதி நகருக்கு நடந்தே தான் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பாரதி நகரில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்