போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-31 10:39 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே கால்வாயில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதுபோல கடைவீதி பகுதியிலிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி