போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-28 17:19 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறநகர் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால் பஸ்கள் அனைத்தும் நகர பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஅள்ளி, அஞ்செட்டி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் நகர நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகிறது. மேலும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி