விபத்து அபாயம்

Update: 2023-05-24 15:25 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகேயுள்ள மாங்காடு நெடுஞ்சாலை பகுதிகளில் லாரிகளில் அளவுக்கு அதிகமாக தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி சென்று வருகின்றனர். இப்படி அளவுக்கு அதிகமாக லாரிகளில் தேங்காய் உரி மட்டைகள் ஏற்று செல்லும் போது, மரங்களில் உரசி வழி நெடுகிலும், சாலையெங்கும் கொட்டி கிடக்கிறது. இதனால் அதன் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிக அளவில் இருந்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி