வழிகாட்டி பலகையில் ஊர் பெயர்கள் அழிப்பு

Update: 2023-05-24 14:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகேயுள்ள மேலாத்தூர் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஊர் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில், மர்மநபர் சிலர் ஊர் பெயர்களை அழித்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி