அதிகரிக்கும் சாலை விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

Update: 2023-05-21 12:02 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் பகுதி சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அதுமட்டுமின்றி வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் சாலை விபத்துகளும் அதிகரி்த்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.




மேலும் செய்திகள்

பஸ் வசதி