நடவடிக்கை தேவை

Update: 2023-05-17 15:28 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புறநகர் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பஸ்கள் அனைத்தும் நகர பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஅள்ளி, அஞ்செட்டி, பெங்களூரு, சென்னை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கல்குவாரி லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை நகருக்குள் வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கனரக வாகனங்களை மாற்றுவழியில் செல்ல வேண்டும்.

-குரு, தர்மபுரி.

மேலும் செய்திகள்