கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-07-22 15:17 GMT

உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள சேந்தநாடு, திருநாவலூர் உள்ளிட்டகிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அரசு பஸ்சில் உளுந்தூர்பேட்டை வந்து, பின்னர் அங்கிருந்து மாற்று பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி உளுந்தூர்பேட்டையில் இருந்து சேந்தநாடு பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்