சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-05-17 10:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் போலீஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதால், இந்த பஸ் நிறுத்ததிற்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் நிழற்குடைக்கு வெளியே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் இந்த பயணிகள் நிழற்குடை யாருக்கும் பயன்படாமல் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்