நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-07 12:24 GMT
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சமயபுரம் பஸ் பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளது. மேலும், அங்குள்ள குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையின் இருக்கைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி