சரியான நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-07 11:54 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்திற்கு தினமும் 3 தடவை அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊருக்குள் வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காலை, மாலை என குறிப்பிட்ட நேரங்களில் பிரித்து சரியான நேரத்தில் அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்