சரியான நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-07 11:54 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்திற்கு தினமும் 3 தடவை அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊருக்குள் வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காலை, மாலை என குறிப்பிட்ட நேரங்களில் பிரித்து சரியான நேரத்தில் அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி