செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், போலீஸ் நிலையம் செல்லும் சாலையில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வழி செய்ய வேண்டும்.