பஸ்கள் இயக்கப்படுமா ?

Update: 2023-04-30 17:59 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்பத்திரி, தாலூகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பொதுமக்கள் பாப்பிரெட்டிப்பட்டிக்கு தான் வரவேண்டும். அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை. தர்மபுரியில் இருந்து வரும் பஸ்கள் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தோடு நின்று விடுகிறது. இதனால் தர்மபுரியில் இருந்து பட்டுகோணாம்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு பகுதிக்கு செல்லும் மக்கள் பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் சேலத்தில் இருந்து வரும் பஸ்கள் நேராக அரூர் செல்வதால் பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்ல பஸ்கள் இல்லாமல் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சாமியாபுரம் கூட்ரோடுக்கும், சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்கும் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி