போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-04-30 10:25 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சாலை லெட்சுமாங்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றத்திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கால்நடைகள் இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளைபிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி