சாலையில் தேங்கிய மணல் அள்ளப்படுமா?

Update: 2023-04-30 10:22 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா முன்பு உள்ள முத்துப்பேட்டை சாலையின்மேல் மணல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அதன் மீது நடந்து செல்கின்றனர். இதன்காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள் பொதுமக்கள் மீது மோதவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தேங்கி கிடக்கும் மணலை அள்ளிட நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்