ஆபத்தான நிழற்குடை

Update: 2023-04-23 12:48 GMT

 பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையின் மீது அருகே உள்ள ஒரு மரம் சாய்ந்த நிலையிலும், மரக்கிளைகள் உடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பயணிகள் இந்த நிழற்குடையில் அமர்ந்திருக்கும்போது நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி