ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-21 16:11 GMT

தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து பொருட்களை ஏற்றிச்செல்கின்றன. இந்த லாரிகள் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள இணைப்பு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இணைப்பு சாலையோரத்தின் அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன்காரணமாக லாரிகள் சாலையின் மேற்பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்