கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-04-12 17:19 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரி, பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் காலை, மாலை நேரங்களில் நகர பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் மாணவர்களும் பஸ்களில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்