பஸ் வசதி வேண்டும்

Update: 2022-07-21 15:04 GMT

சிவகங்கை மாவட்டம் நகரில் அரசு மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பகுதி வழியாக இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.  இதனால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்