உயரமான வேகத்தடை

Update: 2023-04-12 13:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகம்பூர் கிராமத்தில் குலக்கா நத்தம் பிரிவு சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சாலை வழியாக செல்லும் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் இந்த வேகத்தடையை கடக்கும்போது சேதம் அடைந்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை உயரமாக இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்