பழுதடைந்த பயணிகள் நிழலகம்

Update: 2023-04-09 14:21 GMT

நாகை கோட்டைவாசல்படியில் உள்ள பயணிகள் நிழலகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக நிழலகத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் நிழலகத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிழலகம் இருந்தும் பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்


மேலும் செய்திகள்