பாலத்துக்கு தடுப்புச்சுவர் தேவை

Update: 2023-04-02 13:54 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வேதநாயகபுரம் பகுதியில் காட்டாற்று பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் வழியாக பட்டுக்கோட்டை, கரம்பயம், தஞ்சாவூர் பகுதிக்கு தினமும் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காட்டாற்று பாலத்தில் தடுப்புச்சுவர் உடைந்து தடுப்புசுவர் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் காட்டாற்றுக்குள் தவறி விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்துக்கு தடுப்புச்சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்