தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 4 பஜார் வீதிகள், பஸ் நிலையம் பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்திவிட்டு வாகன உரிமையாளர்கள் அப்படியே சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகளும் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.