புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-29 16:08 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து வெள்ளிசந்தை, குண்டாகனூர், சின்னவரட்டம்பட்டி, திம்மராயனஅள்ளி, வெலகலஅள்ளி, ஆலப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் செல்கின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்களும் ஏராளமானோர் உள்ளனர். இந்தநிலையில் அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து இந்த புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கினால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும்.

-விக்னேஷ், மராண்டஅள்ளி.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி