ஆபத்தான பயணம்

Update: 2023-03-26 15:55 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சில நாட்களாக தனியார் பஸ்கள் மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்வதில்லை. இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் அரசு பஸ்களில் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மாரண்டஅள்ளியில் இருந்து ராயக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மல்லாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் போதிய பஸ்கள் இயக்குவதில்லை. எனவே அனைத்து பகுதிகளிலும் பஸ்களை இயக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்