பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-03-26 11:00 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு ஆயக்காரன்புலம் 1,2,3,4 சேத்திகள், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்பவர்கள் அங்குள்ள ஆலமரத்தின் அடியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். அதாவது ஆலமரத்தடியை பஸ் நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ்சுக்காக மழையிலும், வெயிலும்  காத்திருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி