போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

Update: 2023-03-26 10:57 GMT

தஞ்சை நாகை சாலையில் உள்ள கவுதம் நகர், ஜோதிநகர் மற்றும் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் அதிகளவில் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றனர். இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் குதிரைகள் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். இவற்றால் சாலை விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி