கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-26 08:28 GMT

நாங்குநேரி தாலுகா கண்மணியன்குடியிருப்பில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் பரப்பாடியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். நாங்குநேரியில் இருந்து கண்மணியன்குடியிருப்பு வழியாக பரப்பாடிக்கு காலை, மாலையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்வதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதலாக டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்