விதிகளை மீறும் ஆட்டோக்கள்

Update: 2023-03-22 15:01 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விதித்துள்ளது. விதிமுறைகளை மீறி சில ஆட்டோக்களில் சுமார் 15 நபர்களை ஏற்றிச் செல்லுகின்றனர். சிலர் சரக்கு வாகனங்களை போன்று தக்காளி, காய்கறி, சிமெண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை வேண்டும்.

-பாலா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்