ஷேர் ஆட்டோ இயக்கப்படுமா?

Update: 2023-03-19 15:49 GMT

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி இ.பி.காலனி பகுதியில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் புதிய பஸ் நிலையம் செல்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் புதிய பஸ் நிலையம் செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி