முட்புதர் சூழ்ந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-03-12 16:16 GMT

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் ராஜக்காப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே முட்புதர்களை அகற்றி நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்