சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2023-03-12 10:32 GMT

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த காரையூர் ஊராட்சியில் காமராஜபுரம் உள்ளது. இங்குள்ள தரைப்பாலம் ஒன்று முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பாலத்தில் உள்ள கைப்பிடி சுவர்கள் உடைந்து உள்ளன. பாலத்தின் தூண்களும் முழுவதும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழலில் நிற்கிறது. இதன்காரணமாக பாலத்தின் வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தை அகற்றிவிட்டு புதிய தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி