மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள பாதை

Update: 2023-03-05 11:35 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு

சாய்வுதள பாதை

பல்லடம் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் செயல்படுகிறது. ஆனால் ஏ.டி.எம். மையங்களில், சாதாரண படிகளால் ஆன பாதையே உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள பாதை அமைக்கப்படவில்லை. இதனால் அவசரத்தேவைகளுக்காக பணம் எடுக்கச்செல்லும் மாற்றுத்திறனாளிகள். சாய்வுதள பாதை இல்லாததால் கடும் அவதிப்படுகின்றனர்.ஏ.டி.எம்.மையங்களில் முன்பு அமர்ந்து கொண்டு, வேறு யாராவது வந்தால், அவர்கள் துணையுடன் தான் ஏ.டி.எம். மையங்களுக்குள் செல்ல முடிகிறது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே வங்கி நிர்வாகங்கள், ஏ.டி.எம். மையங்களுக்கு மாற்றுத் திறனாளிகளும் செல்லும் வகையில் சாய்வு தள பாதை அமைக்க வேண்டும்.

பழனிவேல்,பல்லடம்,

98763 64323

மேலும் செய்திகள்