கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2026-06-21 11:26 GMT

அரியலூரில் இருந்து முத்துவாஞ்சேரி வரை செல்வதற்கு தற்போது இரண்டு நகரப் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட இரண்டு பஸ்கள் மட்டுமே தற்போதும் இயக்கப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் தினமும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் நகரப் பஸ்களை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்