நாமக்கல்லில் இருந்து திருச்சி, துறையூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளுகுகு செல்லும் பஸ்கள் நாமக்கல் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்றவாறு சென்று வந்தன. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து திருச்சி, துறையூர், மோகனூர் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வர கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குளு சென்று வருகின்றன. ஆனாலும் ஒரு சில பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் உள்ளே வராமல் செல்கின்றன. எனவே அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.