சரிசெய்யப்படாத எச்சரிக்கை விளக்கு

Update: 2023-03-01 12:07 GMT

ராமேஸ்வரத்தில் இருந்து திருமயம் வழியாக திருச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்சமயம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமயம் நகருக்குள் செல்லும் சாலை பிரிவில் தாமரைக்கம்மாய் அருகே உள்ள எச்சரிக்கை மின்விளக்கு உடைந்து சாய்ந்துள்ளது. தற்போது எச்சரிக்கை விளக்கு எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு சரி செய்து கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி