வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2023-03-01 12:06 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-ஆலத்தூர் கேட்டு செல்லும் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் அடிக்கப்பட்டு இருந்த வெள்ளை நிற கோடுகள் தற்போது அழிந்த நிலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி