பேருந்து மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-02-19 09:07 GMT

பலவருடங்களாக நாகர்கோவிலில் இருந்து பாபநாசத்திற்கு களக்காடு வழியாக காலை 7.25-மணிக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண்-567-பி பேருந்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இந்தப் பேருந்தில் சேரன்மாதேவி சென்று அங்கிருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு செல்லும் ஐ.டி.ஐ., மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் மிகுந்த சிரமப்படுகிறாா்கள். போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்