புகை மூட்டத்தால் வாகனஓட்டிகள் அவதி

Update: 2023-02-08 15:14 GMT

மேட்டூரில் சேலம் நெடுஞ்சாலையில் மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே சாலை ஓரத்தில் குப்பை கிடங்கு போன்று குப்பைகள் கொட்டப்படுகின்றன. பின்பு அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலைஓரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பகுதியில் தினமும் குப்பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, மேட்டூர்.

மேலும் செய்திகள்