நடவடிக்கை தேவை

Update: 2023-02-05 08:29 GMT

ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து காலை 7.40 மணிக்கு தர்மபுரம், ஆடராவிளை, வைராகுடி, பருத்திவிளை, கோணம், வேப்பமூடு, வடசேரி வழியாக பண்டாரதோப்புக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு பஸ்சை இயக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்