விருதுநகர் மாவட்டம் விளையாட்டு மைதானத்தின் வடக்கு பகுதியில் நகருக்கு நுழையும் பிரிவில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலை ஒருவழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் வேகத்தடை அகற்றப்படாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வேகத்தடையை அகற்றி விளையாட்டு மைதானத்தின் சர்வீஸ் ரோட்டு பகுதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.